₹170
ஒரு நாள், ஒரு எறும்பு தண்ணீர் குடிக்க ஆற்றங்கரைக்கு செல்கிறது. தவறுதலாக அது நீரில் விழுந்து மூழ்கப் போகிறது. அதை பார்த்த புறா, மரத்தில் இருந்து ஒரு இலைக் கிழித்து நீரில் விடுகிறது. அந்த இலையைப் பிடித்து எறும்பு தப்பிக்கிறது. சில நாட்கள் கழித்து, ஒரு வேட்டைக்காரன் புறாவை பிடிக்க முயற்சிக்கிறான். அதை பார்த்த எறும்பு, அவன் காலில் கடிக்கிறது. வலியால் வேட்டைக்காரன் கவனம் சிதறுகிறது. அதனால் புறா பறந்து தப்பிக்கிறது.
சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட வாய்ப்பிருக்கிறது. ஏன் ஒரு குழந்தைக்கு நீதியாக இருப்பது பெரியவருக்கு நீதியல்லாமல் கூட இருக்கலாம்? மகாத்மா காந்தி கொண்டாடிய, புரட்சியாளர் லெனின் பாராட்டிய லியோ டால்ஸ்டாய் அன்பு கசியும் எழுத்துகளால் அறியப்பட்டவர். போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதியவர். அவரது கைகளில் வழக்கமான புழக்கத்திலுள்ள சிறார் கதைகள் புது உருவெடுக்கின்றன.

Add A Review
Your email address will not be published. Required fields are marked
Your Rating *
You need to Login OR Register